search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் தற்கொலை"

    • தென்மேற்கு பருவமழை 20.7 சதவீதம் குறைவாக பெய்துள்ளது
    • வழக்கமாக சராசரியாக 57.4 சதவீத மழை பெய்ய வேண்டும்

    மகாராஷ்டிரா மாநிலம் மரத்வாடா மண்டலத்தில் இந்த வருடம் இதுவரை 685 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பீட் மாவட்டத்தில் மட்டும் 185 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த மாவட்டம் மகாராஷ்டிரா மாநில விவசாயத்துறை மந்திரியாக இருக்கும் தனஞ்செய் முண்டே மாவட்டமாகும்.

    மத்திய மகாராஷ்டிராவின் வறண்ட மண்டலமான மரத்வாடாவில் அவுரங்காபாத், ஜல்னா, பீட், பர்பானி, நன்டெட், ஓஸ்மனாபாத், ஹிங்கோலி, லதுர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.

    ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இந்த தற்கொலைகள் நடந்துள்ளன. இதில் 294 பேர் பருவமழை மாதங்களான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்தில் தற்கொலை செய்துள்ளனர்.

    மரத்வாடா மண்டலத்தில் தற்போது 20.7 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. செப்டம்பர் 11-ந்தேதி வரை 45.54 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 57.4 சதவீத மழை பெய்ய வேண்டும். ஆனால் தற்போது குறைவாக பெய்துள்ளது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் முண்டே, கடந்த ஜூலை மாதம் ஏக்நாத் தலைமையிலான மந்திரிசபையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓஸ்மானாபாத்தில் 113 விவசாயிகள், நன்டெட்டில் 110 விவசாயிகள், அவுரங்காபாத்தில் 95 விவசாயிகள், பர்பானியில் 58 விவசாயிகள், லுதுர் மாவட்டத்தில் 51 விவசாயிகள், ஜல்னாவில் 50 விவசாயிகள், ஹிங்கோலியில் 22 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் விவகாரத்தை சந்திரசேகர ராவ் பேசினார்.
    • கடந்த 8 ஆண்டுகளில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெலுங்கானா, போலீசில் ரெய்து ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் வெளி மாநில முதல் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

    அந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் விவகாரத்தை சந்திரசேகர ராவ் பேசினார்.

    இந்த பேச்சை சுட்டிக் காட்டி தெலுங்கானாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்து ஓய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா கேள்வி எழுப்பி உள்ளார்.

    மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை பற்றி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசியது நல்லது. அதே போல் தெலுங்கானாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்ற கேள்விக்கும் பதில் தர வேண்டும் அல்லவா?

    தெலுங்கானாவில் கடந்த 8 ஆண்டுகளில் 8 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெலுங்கானா, போலீசில் ரெய்து ஸ்வராஜ் வேதிகா அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த விவசாயிகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா?.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
    • தெலுங்கானாவில் 3 ஆயிரத்து 55 பேரும், மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 226 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    நாட்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக கடந்த 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளின் புள்ளி விவர பட்டியலும் இணைக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆயிரத்து 552 பேர் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகத்தில் 6 ஆயிரத்து 95 பேர் தற்கொலை செய்துள்ளனர். தெலுங்கானாவில் 3 ஆயிரத்து 55 பேரும், மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 226 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் 171 பேர் உயிரை மாய்த்துள்ளனர்.

    இந்த தற்கொலைகளுக்கான தனிப்பட்ட காரணங்கள் எதுவும் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலை அறிக்கையில் கூறப்படவில்லை எனவும் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×